"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
எங்களைப் புறக்கணித்தால் ... வைகோ எச்சரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">அரியலூர் (திருச்சி):
மாநிலக் கட்சிகளின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால் தீவிரவாதம் தலைவிரித்தாடும் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப்பேசுவது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிடக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான்கண்டிப்பாய் குரல் கொடுப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது எங்கள் கடமை. அதற்காக தனி ஈழம் கொடுங்கள் என்றுவாஜ்பாயிடம் நாங்கள் கேட்கவில்லை. மாநிலக் கட்சிகளை பிரதமர் வாஜ்பாய் அரவணைத்துச் செல்ல வேண்டும்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
பிராந்தியக் கட்சிகளின் துணையோடுதான் வாஜ்பாய் ஆட்சி நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த தவறினால்காஷ்மீரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
அவர்கள் ஆட்சி காலத்தில் பிராந்தியக் கட்சிகளைப் புறக்கணித்து நடந்து கொண்டதால்தான் காஷ்மீரில் வன்முறைதற்போதும் தலைவிரித்தாடுகிறது.
பிராந்தியக் கட்சிகளின் உணர்வுகளை அடக்கினால் இங்கும் அந்த தீவிரவாதம் வளர்ந்திருக்கும். மதிமுக நடத்தும்ஈரோடு மாநாட்டில் பல கோரிக்கைகள் வைப்போம். அதில் இலங்கைத் தமிழர் நலன் பற்றியும் ஒரு தீர்மானம்இயற்றப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications