கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
"பணக் கூடை"?: பழக்கூடையில் 25 லட்-சம்---2 -பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சாத்துக்குடிப் பழக்கூடையில் 25 லட்ச ரூபாயை மற்ைது வைத்து நாக்பூரில் இருந்துசென்னைக்கு எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாக்பூரை சேர்ந்த-வர்கள் கோபால் திவாரி, ராஜாராம் சுந்தர் மிஸ்ரா. இவர்கள்இருவரும் ஒ-ரு பெரிய சாத்துக் குடி பழக்கூடையுடன் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடுஎக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்திறங்கினர்.
அந்த பழக்கூடையை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு தங்கசாலைக்குசென்று கொண்டிருந்தனர். வழியில் யானைக்கவுளி போலீசார் வாகனச் சோதனையில்ஈடுபட்டிருந்தனர். வட இந்தியர் இருவர் சாத்துக் குடியுடன் சைக்கில் ரிகஷாவில்போவதை பார்த்து சந்தேகப்பட்டு வண்டியை நிறுத்தினர்.
பழக்கூடையை சோதனையிட்டபோது, உள்ளே பழங்களுடன் பணக்கட்டுகள்இருந்தன.
அதிர்ந்து போன போலீசார் அத்தனையையும் அள்ளிக் கொண்டு பூக்கடை போலீஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே வைத்து பழக்கூடையை பிரித்த போது 25லட்சத்து 30 ஆயிரத்து 900 ரூபாய் இருந்தது. அத்தனையும் 500 ரூபாய், 100ஸ ரூபாய்நோட்டுகள்.
விசாரணையில் தங்கசாலையில் உள்ள அசோக்குமார் என்பவர் வீடு கட்டுவதற்காகபணம் கேட்டார். அதற்காக நாக்பூரில் இருந்து கொண்டு வந்தததாக தெரிவித்தனர்.எதற்காக சாத்துக்குடி கூடையில் மறைத்து வைத்தனர் என்ற கேள்விக்கு அவர்கள்சரியான பதில் அளிக்கவில்லை. அதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.