தமிழகத்தில் இன்று
கோ-வை போ-லீஸ் கமிஷ்னரை மாற்-ற பொ-து-மக்-கள் எதிர்ப்-பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை கமிஷ்னர் இடமாற்றம் செய்ய பொதுமக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னர், கோவையில் அமைதி திரும்ப, மிகவும் திறமையாக செயல்பட்டுபொதுமக்களிடையே நல்ல பெயரை கமிஷனர் ஏற்படுத்திக் கொண்டார். எனவே, தற்போது நடந்தஎம்.பி.,கமிஷ்னர் மோதல் உச்சக்கட்டத்தை அடையாமல் மறைந்து போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன் மீது போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன், போலீஸ் வீடியோ கிராபர் மற்றும்இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாக வழக்குத் தொடர்ந்தார். இதனால் ஆவேசமடைந்த எம்.பி.,ராதாகிருஷ்ணன்,போலீஸ் கமிஷ்னரை மற்றியே தீருவேன் எனக் கூறி டெல்லி விரைந்துள்ளார். டெல்லி சென்ற எம்.பி.,இன்னும்கோவை திரும்பவில்லை.
அதேசமயம், எம்.பி., உட்பட வழக்குத் தொடரப்பட்ட 56 பேரில் யாரையும் போலீசார் இதுவரை கைதுசெய்யவில்லை. அவர்களைக் கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டவில்லை.
இந்தப் பிரச்னை குறித்து போலீசார் கூறுகையில், "தற்போது இந்த சம்பவம், வழக்கு குறித்து மத்திய, மாநிலஅளவில் "மேலிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தான் -முடிவு தெ-ரியும்.
இந்நிலையில் போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனை மாற்ற பொதுமக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.அவ்வாறு கமிஷ்னர் மாற்றப்பட்டால், எம்.பி.,க்கு கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும், பா.ஜ.கபலவீனமடையவும் வாய்ப்புள்ளது என்ற கருத்து -நிலவுகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பா.ஜ.க தொண்டர்கள் புதிய யுக்தியைக் கையாளத்தொடங்கியுள்ளனர். "என்னிடம் விசாரணை நடத்தினால், நானும் தற்கொலை செய்து கொள்வேன். என்னுடையதற்கொலைக்கு போலீசார் தான் காரணம் கடிதம் எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கடிதத்தையேஆயுதமாக மாற்றியுள்ளதால், போலீசாரும் மேற்கொண்டு விசாரணையைத் தொடராமல் -நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸ் கமிஷ்னரை மாற்றும் -முயற்சியைக் கைவிட்டு, வழக்கு மட்டும் வாபஸ் ஆகும் சூழ்-நிலைஉருவாகி வருகிறது. இரண்டு ராதாகிருஷ்ணன்களிடையேயும், சமாதானத்தை ஏற்படுத்த "மேலிட அளவில்முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெ-ரிகிறது.