தமிழகத்தில் இன்று
கிடைச்சாச்சு ஆபீஸ்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
நடிகை மனோரமாவின் டப்பிங் தியேட்டர் தமிழக காங்கிரஸ் அலுவலகம் ஆகப் போகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகம்சென்னை மைலாப்பூர் லஸ் கார்னர் அருகில் செயல்பட்டு வந்தது.
திண்டிவனம் ராமமூர்த்தி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அந்த அலுவலகத்தை பூட்டினார். அலுவலகத்தில் இருந்தமேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்-தை-யும் எ-டுத்-துச் சென்-றார். இ-த-னால் அ-லு-வ-ல-கம் இல்-லா-த காங்--கி-ரஸ்"பி-ளாட்-பா--ர" கட்-சி-யா-ன-து.
புதிய தலைவராக நியமிக்கப்பட்ட இளங்கோவன் தற்பொழுது தேனாம்பேட்டையில் உள்ள முன்னாள் எம்.பி அன்பரசு வீட்டில்தற்காலிக அலுவலகத்தை திறந்து அங்கிருந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் அலுவலகத்திற்கு கடந்த ஒரு வாரமாக இடம்தேடப்பட்டது. மந்தைவெளியிலும், கீழ்பாக்கத்திலும் இடம் பார்க்கப்பட்டது.
இறுதியாக தற்பொழுது தேனாம்பேட்டை சீதம்மாள் காலணியில் உள்ள நடிகை மனோரமாவின் டப்பிங்தியேட்டர் காங்கிரஸ்அலுவலகத்துக்காக வாடகைக்கு பேசி -முடிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு ஏ.ஸி செய்யப்பட்ட ஹால், சிறிய அளவில் கருத்தரங்குமேடை, போன்றவைகளும் உள்ளன.
டப்பிங் தியேட்டரில் வெள்ளையடிக்கும் பணி நடந்து வருகிறது. ஜூலை மாதம் -முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம்இங்கு -செயல்-ப-டத் தொடங்கும்.