தமிழகத்தில் இன்று
-ஜோ-டியாய் கம்பி எண்ணும் இன்ஸ்பெக்டர், ஏட்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நீதிமன்றத்திலேயே ஆள்மாறாட்டம் செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த விபரமாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் பிளாட்பாரத்தில் ஊனமுற்ற பெரியவர் முனுசாமி என்பவர் பெட்டிக்கடைவைத்திருந்தார். அவரது கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி இன்ஸ்பெக்டர் வல்சலம், மற்றும் ஏட்டுநல்லுசாமி ஆகியோர் வற்புறுத்தினார்கள்.
இதை எதிர்த்து அவர் தடையுத்தரவு பெற்றார். ஆனால் அது தெரியாமல் போலீசார் அந்தக் கடையைஅப்புறப்படுத்திவிட்டனர்.
இதனால் முனுசாமி இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கிடையில் அதே இடத்தில் பெட்டிக்கடை வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையில் வழக்குத் தொடர்ந்த முனுசாமிக்குப் பதில் வேறு ஒருவரை இன்ஸ்பெக்டர் வல்சலம் மற்றும் ஏட்டுநல்லுசாமி ஆகியோர் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து நடந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் வழக்குத் தொடர்ந்த முனுசாமிஅல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையில் வழக்குத் தொடர்ந்த முனுசாமி நாகர்கோவிலுக்குச் சென்றிக்கிறார் என்பதும் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வல்சலம், மற்றும் ஏட்டு நல்லுசாமிஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பின்னர் சென்னை மத்தியச் சிறையில்அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications