தமிழகத்தில் இன்று
மணிப்பூரில் 9 பொதுமக்கள் சுட்டுக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இம்பால்:
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் டவுன் பகுதியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கண்மூடித்தனமாய் சுட்டதில் 9 அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர்.இவர்களில் ஒருவர் பெண்.
ஞாயிற்றுக்கிழமை வாகனம் ஒன்றில் 12 க்கும் மேற்பட்ட பயணிகள் பிகார் - அசாம் எல்லைப்பகுதியில் உள்ள ஜிரிபாம் டவுன் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கையில் துப்பாக்கிகளுடன் அங்கு வந்த கும்பல் ஒன்று கண்மூடித்தனமாய்ச் சுட்டதில் வாகனத்தில் இருந்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். காயமடைந்த மேலும் இரண்டு பேர் ஜிரிபாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும்இறந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. அவர்களுக்கு ஜிரிபாம் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் கேள்விப்பட்டதும் உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதி முழுவதும் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.