For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இலங்கைச் சிறையில் கன்னியாகுமரி மீனவர்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் மரியதாஸ், அந்தோணி. இவர்கள் இருவரும் மீன் பிடிப்பதற்காக கடந்த ஜனவ ரி 5ம் தேதிபடகில் சென்றனர். அதன் பின்னர் அவர்கள் கரை திரும்பவில்லை.
மாதக் கணக்கில் அவர்களை தேடும் பணி நடந்தது. ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது அவர்கள் இருவரும்இலங்கைச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது தெரியவந்துள்ளது.
மீன் பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதால், அவர்களை இலங்கை படையினர் கைது செய்துஅந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]