தமிழகத்தில் இன்று
காஷ்மீர் சுயாட்சி தீர்மானம்: மத்திய அரசு முடிவெடுக்கும்-அத்வானி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">காஷ்மீர்:
காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானம் குறித்து பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்பியதும் பேசி முடிவெடுக்கப்படும் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
காஷ்மீருக்கு 1953 ம் ஆண்டுக்கு முந்தைய சுயாட்சி உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியதாவது:
மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பியதும் மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் பற்றி விவாதித்து முடிவுஎடுக்கப்படும்.
மேலும் இப்பிரச்சனை பற்றி பேசி அதை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. அரசியல் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அத்வானி கூறினார்.












Click it and Unblock the Notifications