தமிழகத்தில் இன்று
பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு - மத்திய அமைச்சர் பொன்னுசாமி தகவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராஜமுந்திரி:
பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிட்டது. வெகு விரைவில் இந்தியாவிலிருந்து பெட்ரோல்ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் இ.பொன்னுசாமி தெரிவித்தார்.
ராஜமுந்திரியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை இரவு அவர் பேசியதாவது:
பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. வெகு விரைவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் அளவுக்கு பெட்ரோல் உற்பத்தி அதிகரிக்கப்படும். பெட்ரோல் உற்பத்தி அதிகமாகியுள்ள அதே நிலையில்டீசல் மற்றும் மண்ணெண்ணெய் உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு பெறவில்லை.
நுகர்வோர்களின் நலனுக்காக டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசு அதிக மான்யம் கொடுத்துவருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அதிக அளவில் சமையல் எரிவாயு உற்பத்தி செய்ய முயற்சிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தி அதிகரித்துவிட்டால், சமையல் எரிவாயுவுக்கும் மண்ணெண்ணெய்க்கும்வழங்கப்பட்டு வரும் மான்யம் 2002-ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைத்துக் கொள்ளப்படும்.
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுப்பதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-2000 என்றபுதிய சட்டம் ஜூன் 7-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டப்படி பெட்ரோலியப் பொருட்களைசேமித்து வைத்துக் கொள்ள விரும்பும் தனியார்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதிபெறவேண்டும் என்றார் பொன்னுசாமி.
யு.என்.ஐ.