தமிழகத்தில் இன்று
டெல்லியில் சர்வதேச ஷூ கண்காட்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டெல்லியில் சர்வதேச ஷூ கண்காட்சி-2000 நடைபெற உள்ளது. வியாழக்கிழமைதுவங்கும் இக் கண்காட்சி 4 நாட்களுக்கு நடைபெறும்.
பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள இக் கண்காட்சியை தோல் ஏற்றுமதி கவுன்சில்,காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி மையம், தேசிய தோல் வளர்ச்சித் திட்டம்ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
8-வது முறையாக நடைபெறும் இக் கண்காட்சியில் நவீன காலணிகள்,பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்கள், காலணி தயாரிப்புக் கருவிகள், இயந்திரங்கள்ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.
இந்தியாவிலிருந்து தோல் காலணிப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்பொருட்டு இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, மத்திய கிழக்குநாடுகள் , ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இத்தாலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில்இருந்து சுமார் 170 காலணி தயாரிப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான அனைத்துவகையான காலணிகளும் இடம் பெறும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.