தமிழகத்தில் இன்று
பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யவேண்டும் - திருமாவளவன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
வன்முறையைத் தூண்டி வரும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும்என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதிலிருந்தே வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.அது அரசியல் கட்சியாக இருக்கவே தகுதி இல்லை.
வன்னியர்களின் நம்பிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்து வருகிறது. எனவே,வனமுறையை தூண்டிவிட்டு மீண்டும் தான் வன்னியர் தலைவர் என்ற நிலைக்குராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யக் கோரி தமிழக ஆளுநரிடமும், தேர்தல்ஆணையரிடமும் மனு கொடுக்க உள்ளோம்.
சிதம்பரம் பகுதியில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைக்குக் காரணமான பா.ம.க.வினர் யாரும் கைது செய்யப்படவில்லை.போலீஸார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றனர் என்றார் திருமாவளவன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications