For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:

தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தர்மபுரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருந்துக் கிடங்கை அவர் புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 3700 மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை1.33 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுளளது. மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டவர்களுக்கு ரூ.1.52 கோடி மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சுகாதாரத் நலத்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகலால் பெண் சிசுக் கொலை எண்ணிக்கைகுறைந்து வருகிறது. பெண் சிசுக் கொலை தொடர்பாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

சுகாதார நலத் திட்டங்களுக்குத் தமிழக அரசு ரூ.1300 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர, தமிழகத்தில் உள்ளஅனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு மருந்துகள்வாங்க மேலும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் வீராசாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X