தமிழகத்தில் இன்று
-த-மி-ழ-கத்-தில் கர்நாடக பஸ் பறிமுதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நஷ்ட ஈடு வழக்கில் கர்நாடக அரசு பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரமணரெட்டி என்பவர் 13.08.1986ல் தனியார் பஸ் ஒன்றில் சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குச் சென்றார். வாணியம்பாடி அருகே தோட்டாளம் கிராமத்தில் எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மோதியதில் பலர்காயமடைந்தனர்.
இந்த விபத்தில் ரமணரெட்டிக்கு இரண்டு கால்களும் செயல் இழந்தன. எனவே தனக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்என்று வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் இருக்கும் போது ரமணரெட்டி மரணமடைந்தார். ஆனால், அவரது மனைவி சுலோசனாம்மாள் வழக்கைத்தொடர்ந்தார். 1998ம் ஆண்டு 95 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது ரமண ரெட்டி பயணம் செய்த தனியார் பஸ் நிறுவனம் ரூ.32,750ம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் ரூ.15 ஆயிரம்,கர்நாடக அரசு பஸ் நிறுவனம் ரூ.47,750ம் வழங்க வேண்டும் எனறு கூறப்பட்டது.
இத்தொகைக்கு 12 சதவீத வட்டியும் உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
இத் தீர்ப்-பை கர்நாடக அரசு பஸ் நிறுவனம் மட்டும் மதிக்-கா-மல் இ-ருந்-து வந்-த-து. இது கு-றித்-து 30.04.1999ல் சுலோசனாநீதிமன்றத்தில் முறையிட்டார். அதை ஏற்று கர்நாடக அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி தர்மராஜ் இரண்டு நாட்களுக்கு முன்புஉத்தரவிட்டார்.
அதன்படி வியாழக் கிழமை காலை 11.30 மணிக்கு பெங்களூரில் இருந்து வேலூர் வந்த கர்நாடக அரசு பஸ் ஒன்று ஜப்திசெய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications