தமிழகத்தில் இன்று
பிரதமர் வருகை: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி தமிழகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னைபோலீஸ் கமிஷனர் காளித்து தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் ஜூலை 3ம் தேதி சென்னை வருகிறார். அன்று சென்னையில் தங்குகிறார். 4ம் தேதி காலைசென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள "டைட்டல் பார்க் என்ற சாப்ட்-வேர் பூங்காவை திறந்து வைக்கிறார்.
மாலையில் கயத்தாறில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி மையத்தை அவர் திறந்து வைக்கிறார்.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமரின் தமிழக வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாறு காணாதவிதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு, எந்த வித மிரட்டலும் காரணமல்ல என்று சென்னையில்வியாழக்கிழமை போலீஸ் கமிஷனர் காளித்து தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அளித்த பேட்டி:
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பிரதமர் வாஜ்பாய் சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்.
அதற்கான பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தவிர, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினர், கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். கமிஷனர், இரண்டு இணை கமிஷனர், 16 துணை கமிஷனர்கள் உள்பட 1500அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.
எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சாலைகளிலும் ஆங்காங்கே போக்குவரத்துக்கள் தடைசெய்யப்படும் என்றார்.