தமிழகத்தில் இன்று
எல்லாப் புகழும்பெரியார், அண்ணாவுக்கே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எனக்கு கிடைத்த புகழ் மாலைகள் அனைத்தும், பெரியார், அண்ணாவுக்கே சொந்தம் என்று முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதியின் முத்துக்குளியல் பாகம் 1, பாகம் 2, பொன்னர் சங்கர் நூலின் 4-ம் பதிப்பு ஆகிய நூல்கள்வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசி முத்திரை பதித்தார். அவரது அரசியல்வாழ்க்கையில் இவ்வளவு சுருக்கமான நேரத்தில் இதுவரை பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நடிகர் சரத்குமார், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமிஜெகதீசன், கவிஞர் வைரத்து உள்பட பலர் கருணாநிதியை பாராட்டிப் பேசினர்.
பாராட்டு மழையில் நீண்ட நேரம் குளித்த பின்னர் கடைசியாக முதல்வர் கருணாநிதி பேசித் துவங்கினார்.
""நீண்ட நேரமாகி விட்டது. என்னை தேன் குடத்திலே மிதக்க விட்டு பிறகு அங்கிருந்து எடுத்து வெளியே போட்டுபறந்து காட்டு என்று ஒரு ஈயை பார்த்து சொல்வதை போல ஆணையிட்டிருக்கின்றீர்கள்.
இவ்வளவு நேரம் நான் இந்த மேடையிலே மயங்கி விழாமல் இருந்தேனே அது தான் ஆச்சரியம். அந்த அளவிற்குபுகழ் மாலை, பாராட்டு மாலை மலை மலையாக குவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
இவ்வளவிற்கும் நான் பொருத்தமானவனா என்ற கேள்விக்கு என்னால் சுலபமாக விடை காண முடியும், இல்லைஎன்று.
இங்கு பேசிய துணை வேந்தர் அறவாணன், திறமையான உயிர்ப்புள்ள பேச்சாளிக்கு தேவை Appearance, Beauty,Clarity, Depth, Expression ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> என்று எடுத்துச் சொன்னார். சொல்லி விட்டு சுருக்கமாக ஏ,பி,சி,டி,இ என்ற இந்த ஐந்துஎழுத்துக்களுக்குரிய சொற்களுக்குரியவர் தான் கலைஞர் என்று குறிப்பிட்டார்.
ஆங்கிலத்திலே அந்த ஐந்து எழுத்துக்களுக்கும் அடுத்து ஆறாவது எழுத்து ஒன்று உண்டு. அது "எப். அதை அவர்விட்டு விட்டார். F for Feed. ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> இது இல்லாவிட்டால் இவ்வளவும் இல்லை.
இது கணினி யுகம். கம்ப்யூட்டர் யுகத்தில் Feed ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பண்ணியாக வேண்டும். இவ்வளவையும் எனக்கு "பீட்பண்ணியவர்கள் பெரியாரும், அண்ணாவும் தான். எனவே இந்த புகழ் மாலைகளை அவர்களுக்கு தாளடிகளுக்குச்சொந்தமாக்கி விடை பெறுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications