தமிழகத்தில் இன்று
சந்திரசேகர் கட்சி அங்கீகாரம் ரத்தாகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
தேர்தலில் படு தோல்வியடைந்த 7 மாநிலக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் குறைந்த ஓட்டுக்களைப் பெறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் ஏற்கனவேமுடிவெடுத்துள்ளது.
ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் செல்லுபடியான ஓட்டுக்களில் 6 சதவீதத்தை ஒரு கட்சி பெற வேண்டும். அல்லது ஒவ்வொரு 30 சட்டசபைதொகுதிகளில் ஒரு தொகுதியிலோ, ஒவ்வொரு 15 லோக்சபா தொகுதிகளில் ஒரு தொகுதியிலோ கட்சி வெற்றி பெற வேண்டும்.
இதில் எதிலும் வராத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் ஹரியானா விகாஸ் கட்சி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராமராவ் மனைவி லட்சுமி சிவபார்வதியின் தெலுங்குதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள ஐக்கிய சிறுபான்மைக் கட்சி ஆகியவை சொந்த மண்ணில் அங்கீகாரம் இழந்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. தாதர் நகர் ஹவேலியில் சிவசேனாவின் அங்கீகாரத்தை ரத்து செய்யதேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சமாஜ்வாடி ஜனதா கட்சிக்கு சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசின் சமதாகட்சிக்கு ஹரியானவிலும் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.
கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அளவில் அதிக ஓட்டுக்களைப் பெறவில்லை. இதுதொடர்பாக விளக்கம்அளிக்க ஜூலை 15 ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ம் தேதி இதன் மீதான விசாரணை நடக்கிறது.
இந்தியக் குடியரசு கட்சி, ஜனதா கட்சி ஆகியவற்றுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications