தமிழகத்தில் இன்று
இந்தியாவில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்தது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியாவில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 2685 நிறுவனங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் எந்த புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும் அவை நிறுவனங்கள சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவேண்டும் என்ற விதி உள்ளது. கடந்தமே மாதம் 2685 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஏப்ரல் மாதம் 3055 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை விட இந்த ஆண்டு மே மாதம் ஏறக்குறைய 141 நிறுவனங்கள் கூடுதலாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
2685 நிறுவனங்களில் 2677 நிறுவனங்கள் லிமிடெட் நிறுவனங்களாகும். இதில் 244 நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களாகவும், 2433நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மே மாதம் பதிவு செய்யப்பட்ட 2685 நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.909 கோடியாகும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 738 நிறுவனங்கள்மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் 501-ம், தமிழகத்தில் 249-ம், குஜராத்தில் 231-ம், ஆந்திராவில் 168-ம், கர்நாடகத்தில் 168-ம், மேற்கு வங்கத்தில் 146நிறுவனங்களும் மற்றவை பிற மாநிலங்களிலும் பதிவாகியுள்ளன.
பதிவான நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் மே மாதமே இயங்கத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications