தமிழகத்தில் இன்று
நெல்லையில் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லை:
நெல்லையில் ஓடும் பஸ்சில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். வயது(30). இவர் தனியார் பஸ்சில் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார்.
தச்சநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் மணி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில் செல்வத்திற்கும், செல்விக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் மணிக்குத் தெரிய வந்தது.
அவர் தன் மனைவியைக் கண்டித்ததுடன் செல்வத்தையும் கண்டித்திருக்கிறார். ஆனால் அவர் மனைவி செல்வியோ செல்வத்துடன் ஓடி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மணி செல்வத்தை எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவது என்று திட்டம் தீட்டினார்.
இதற்கிடையே புதன்கிழமை பிற்பகல் ஹைகிரவுண்டிலிருந்து செல்வம் ஜங்கஷனுக்கு பஸ்சை ஓட்டி வந்தார்.
அப்போது மணி தனது உறுவினர்கள் மூன்று பேருடன் பஸ்சில் ஏறி செல்வத்தைச் சராமரியாய் வெட்டினார்.
சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications