தமிழகத்தில் இன்று
ரஷ்யாவிடம் பீரங்கி வாங்குகிறது இந்தியா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மாஸ்கோ:
ரஷ்யாவிடமிருந்து டி-90 பீரங்கி வாங்குவது குறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகோர் செர்ஜியோவைசந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகையில், ரஷ்யாவிடமிருந்து 176 கோடி ரூபாய் மதிப்பில் டி-90 ரக பீரங்கிகளை வாங்க இந்தியாதிட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த வார இறுதிக்குள் முடிவெடுக்கப்படும்.
இதுபோல ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் 200 பீரங்கிகளை தயாரிக்கவும் உரிமம் பெறப்படும். ரஷ்ய தயாரிப்பு டி-84 ரக பீரங்கிகளைஉக்ரைனிடமிருந்து பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதையடுத்து இந்தியாவும் தனது படைபலத்தைப் பெருக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரஷ்யாவில் இருந்து கியோவ் வகை விமானங்கள் வாங்குவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications