தமிழகத்தில் இன்று
"பயிரை மேய்ந்-த வேலி-கள்": போலி பாஸ்போர்ட் விற்ற அதி-கா-ரி-கள்!
காந்திநகர்:
அகமதாபாத்தில் போலி பாஸ்போர்ட்கள விற்-ற பாஸ்போர்ட் அலுவலக 8 அ-தி-கா-ரி-கள், ஊழியர்கள் கை-து செய்-யப்-பட்-ட-னர். இவர்-க-ளைசி.பி.ஐ. கை-து செய்-த-து.
அகமதாபாத் மண்டல அலுவலக ஊழியர்களான இவர்-கள் மே-லும் பல-ரோ-டு -சர்ந்-து கொண்-டு -கிட்-டத்-தட்-ட தனியாக "பி-ரை-வே-ட்"பாஸ்-போர்ட் அ-லு-வ-ல-க-மே நடத்-தி வந்-துள்-ள-னர்.
அவர்களிடமிருந்து 50 போலி பாஸ்போர்ட்டுகள், 100 க்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள், இதர தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன.
போலி பாஸ்போர்ட் தொடர்பாக பாஸ்போர்ட் ஊழியர்களே கூண்-டோ-டு கைது செய்யப்படுவது இ-துவே மு-தல்--மு-றை-யா-கும்.
இதுகுறித்து சி.பி.ஐ. கூறியதாவது:
கடந்த 18 மாதங்களாக அகமதாபாத் பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை ஒவ்வொன்றும் ரூ. 8000 என்ற விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன. பாஸ்போர்ட்டு ஏஜன்டுகளின் உதவியின் மூலம் பாஸ்போர்ட் அலுவலகஊழியர்கள் இந்த பாஸ்போர்ட்டுக்களை விற்றிருக்கிறார்கள். கிடைக்கும் தொகையை அவர்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து சி.பி.ஐக்கு கிடைத்த புகாரின் பேரில் தீ-வி-ர விசா-ர-ணை நடத்-தி-னோ-ம்.
நேரடியாகப் பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே விசாரணையில் ஈடுபட்ட போது போலி பாஸ்போர்ட் குறித்த விபரங்கள் தெரியவந்தன. இதை-ய-டுத்-து 8ஊழியர்-க-ளும் அவர்-க-ளுக்-கு உத-வி-ய மே-லும் 2 பே-ரும் கை-து செய்-யப்-பட்-ட-னர்.
அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள், அவற்றைப் பெறுவதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள்,கல்லூரிச் சான்றிதழ்கள், இதர தஸ்தாவேஜூகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications