தமிழகத்தில் இன்று
காம-ரா-ஜர் பிறந்-த நாள்: கோ-வை வ-ரு--கி-றார் சோனி-யா
ஈரோடு:
கோயம்புத்தூரில் ஜூலை 29-ம் தேதி நடைபெறவுள்ள காமராஜர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை தன்னைச் சந்தித்துப் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம்,தனது வருகையை சோனியா காந்தி உறுதிப்படுத்தினார்.
லோக் சபா தேர்தலுக்குப் பிறகு சோனியா காந்தி முதல் முறையாக தமிழகம் வரவுள்ளார். மேலும், தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாககாமராஜர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டில் சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும்விதத்திலும் காமராஜர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட தமிழக காங்கிரஸ் சோனியா காந்தியை அழைத்து வரவுள்ளது.
யு.என்.ஐ.