தமிழகத்தில் இன்று
மு.க.ஸ்டாலின் கா-ரு-டன் வந்-த ஜீப் மோதி சிறுவன் காயம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் கார் வரி-சை-யில் வந்-த ஜீப்மோதியதில் சைக்கிளில் வந்த சிறுவன் காயமடைந்தான். இதை எதிர்த்து பொது மக்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் தி-மு-க பிர-மு-கர் ஆர்.ஜி. ரத்தினம் வீட்டு விழாவில் கலந்து கொள்ளமு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காரில் வந்தார். அவரது காரைத் தொடர்ந்து பலஜீப்கள் ஊர்வலம் போல வந்து கொண்டிருந்தனர்.
பரமக்குடி வழியாக கார் ராமநாதபுரத்திற்கு வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரத்திற்குநுழையுமிடத்தில் ஸ்டாலின் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயன்றபோது ஜீப் ஒன்று சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் மேல் மோதிகீழே தள்ளியது.
அந்த ஜீப்பில் இருந்தவர்கள் பயந்து கொண்டு இறங்கி ஓடி விட்டனர். அந்த சிறுவன்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
ஆத்திரமடைந்த பொது மக்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி ராமநாதபுரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதிரடிப்படை போலீசார் வந்து சாலை மறியல் செய்தவர்களை கலைத்துபோக்குவரத்தை சீர் செய்தனர்.
ஸ்டாலினை வரவேற்க நிறைய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனால் பலகுழிகள் தோண்டப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
எப்-போ-து -நிற்--கும் தமி-ழ-க அர-சி-யல்-வா-தி-க-ளின் அபா-ய கார்- ஊர்-வ-லங்-கள்?-












Click it and Unblock the Notifications