தமிழகத்தில் இன்று
பிரி-வினை தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு: ராமதாஸ்
திருப்பூர்:
இலங்கை இனப் பிரச்சினைக்கு முதல்வர் கருணாநிதி கூறிய செக்ாஸ்ல-லோ-வாக்-கி-ய மாடல் யோசனைதான் சரியான, ஒரே தீர்வு என்று பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு முன்பு கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதிஒப்பந்தங்களை இலங்கை அரசு மதித்ததில்லை. தமிழர்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடிய தமிழர் தலைவர்களின் முயற்சிகள் தோல்வியை அடைந்தன.
தமிழர் பிரச்சினையத் தீர்ப்பது தொடர்பாக இலங்கை அரசு உருவாக்கியுள்ள அமைதித் தீர்வு குழப்பமாக உள்ளது. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதெரியவில்லை.
அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைத்து விடாது. எதிர்க்கட்சிகள், புத்தமதத் தலைவர்கள்ஆகியோரின் சம்மதமும் இதற்குத் தேவைப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஜூலை 3-ம் தேதி பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போதுபிற்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் பிரதமருடன் பேசுவேன்.
திமுக-பாமக உறவு நிலையாகவும், உறுதியாகவும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி நீடிக்கும். வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள்கூட்டணிக்கு வெற்றி கிடைத்தாலும் கூட, பாமக அமைச்சரவையில் பங்கு கேட்காது.
மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், அதிகாரவர்க்கத்தினரின் அலட்சியப் போக்கு காரணமாக அவற்றில்பல திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என்றார் அவர்.