தமிழகத்தில் இன்று
வந்-த-து போலீஸ் வேலைக்-கு...,செய்-த-து -தி-ருட்-டுத்-த-னம்...
கடலூர்:
போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் உயரத்தை அதிகப்படுத்திகாட்டுவதற்காக காலில் தெர்மோகூல் சீட்டை ஒட்டிக் கொண்-டு -வந்-து மோச-டிசெய்தார்.
கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கும்தேர்வு கடலூர் அண்ணா திடலில் நடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த 21ம் தேதியன்றுதொடங்கப்பட்டது. இந்த தேர்வில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தேர்வில் எந்த விதமான முறைகேடுகளும் நடை பெறக்கூடாது என்பதில் தேர்வுக்குழுவினர் கண்ணும் கருத்துமாக கவனத்துடன் செயல் பட்டு வந்தனர். தேர்வுக்குவந்தவர்களைத் தவிர வேறு எவரும் தேர்வு நடை பெறும் இடத்திற்குள்அனுமதிக்கப்படவில்லை.
இந்த கட்டப்பாடுகளுக்கிடையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்ஒருவர் தேர்வுக்கு வந்திருந்தார். அவரது உயரத்தை அளக்கும் போது அவரது பாதம்தரையில் படாததை கண்ட தேர்வுக்குழு அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச்சென்று பரிசோதித்த போது அந்த இளைஞர் பாதத்தில் தெர்மாகூல் சீட்டை ஒட்டிஇருப்பதைக் கண்டு பிடித்தனர்.
அந்த வாலிபர் போலீஸ் வேலையில் சேர தான் விரும்புவதாகவும், உயரம் இரண்டுஅங்குலம் குறைவாக இருந்ததால் இவ்வாறு தர்மாகூல் சீட்டை ஒட்டி வந்ததாகவும்தன்னை மன்னிக்கும்மாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் தேர்வுக்கு குழு அதிகாரிகள் அவரை மன்னித்து எச்சரித்து அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications