தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

விரைவில் மலரும் தமிழ் ஈழம் - -டாக்டர் ராமதாஸ்

சென்னை:

இலங்கையில் தனி தமிழ் ஈழம் மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று பா.ம.க நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பொள்ளாச்சியில் நடந்த பா.ம.க தொகுதி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசும் பொழுது 1989-ம் வருடம் பாட்டாளி மக்கள் கட்சிஆரம்பித்தோம். இதுவரை 97 போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

வேறு எந்த கட்சியும் குறுகிய காலத்தில் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதில்லை. டெல்லியில் சமூக நீதி மாநாடு நடத்தி சாதனை படைத்தோம்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒ.பி.சி ) என்னும் மக்ககளுக்கு 13 சதவீத இட ஒதுக்கீட்டையாவது அமுல் படுத்த வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளின்விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய கடன் ஜப்தியை நிறுத்தவேண்டும்.

அரசு அதிகாரிகள் தாங்கள் அரசிடம் இருந்து பெறும் சலுகைகளுக்கு ஏற்ப நியாயமாக உழைக்க வேண்டும். அரசின் பல்வேறு மக்கள்நலதிட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும். இந்தியாவில் 40 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கை தமிழர்களின் ரத்தமும் நம் ரத்தமும் ஒன்று. அவர்களுடன் நமக்கு தொப்புள்கொடி உறவு உள்ளது. இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ தனிதமிழ்ஈழம் அமைய வேண்டும். இதற்காக நம் குரல் ஓங்கி எப்பொழுதும் அங்கு தனி தமிழ்ஈழம் அமையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கானஅறிகுறிகள் உள்ளன. புலிகள் வெற்றிபெற வாழ்த்துவோம்.

இவ்வாறு பேசினார் டாக்டர் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+