தமிழகத்தில் இன்று
கோர்ட்டுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து ராம்ஜெத்மலானி வருத்தம்
சென்னை:
இந்தியாவில் கோர்ட்டுகளில் முடிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் தனக்கு மிகவும் வருத்தம்அளிப்பதாக மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத்மலானி கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக கோர்ட்டுகளில் வழக்குகள் முடிக்கப்படாமல் தேங்கிக்கிடப்பது வருத்தம்அளிக்கிறது. மொத்தம் 3 கோடி வழக்குகள் இப்படி தேங்கிக் கிடக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் மட்டும் 30லட்சம் வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன.
இவற்றை விரைந்து முடிப்பதற்காக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். வழக்குகள் இப்படி தேங்கிக் கிடக்ககாரணம் போதுமான நீதிபதிகள், நீதிமன்றங்கள், கட்டிடங்கள் இல்லாததுதான். இது தொடர்பாக உயர்நீதிமன்றதலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்களிடம் எவ்வளவு நீதிபதிகள் தேவை எவ்வளவு நீதிமன்றங்கள் ,கட்டிடவசதி தேவை என்று பட்டியல் தயாரித்து ஜூலை மாதத்திற்குள் தரும்படி கூறி கடிதம் அனுப்பியுள்ளேன்.
அவர்கள் பட்டியல் தந்ததும் வருகிற ஆகஸ்டு மாதம் மாநில முதல்வர்கள் , ஐகோர்ட் தமைமை நீதிபதிகள்மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக உரிய விரைவுத்திட்டம் ( ப்ளூ பிரிண்ட்)தயாரிக்கப்படும் . தமிழக முதல்வரிடமும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் இது குறித்து பேசியுள்ளேன்.
உச்ச நீதிமன்றத்தின் கிளை தென் மாநிலத்தில் திறக்கப்படவேண்டும் என்பதை ந ான் வரவேற்கிறேன். இதைகொள்கை அளவில் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இறையாண்மை பாதிக்கும் என்கிறது. அதை மறுபரிசீலனை செய்யும் படி வற்புறுத்துவேன். சுப்ரீம் கோர்ட் கிளையை தென் மாநிலத்தில் நிறுவுவது என்றால்சென்னையிலா, பெங்களுரிலா, ஐதராபாத்திலா என்கிற கேள்வியும் எழுகிறது. அதற்கும் ஒருமித்த முடிவு வரவேண்டும் என்று கூறினார் ராம்ஜெத்மலானி.