For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ம.தி.மு.க, மாநா-டு நிதி வசூல் ரூ.73 லட்சம்
ஈரோடு:
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) நடத்திய தமிழர் எழுச்சி மாநாட்டில் ரூ.73 லட்சம் நிதி வசூலாகியுள்ளது என்றுகட்சியின் பொருளாளர் மு. கண்ணப்பன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் பொருளாளரும், மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பன் கூறியாதவது:
மதிமுக மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டில்நுழைவுச் சீட்டுக் கட்டணம் மற்றும் நன்கொடை மூலம் ரூ.73.45 ஆயிரம் வசூலாகியுள்ளது.
மாநாட்டுச் செலவு ரூ.48.22 லட்சம் போக மீது ரூ.25.23 லட்சம் கைவசம் உள்ளது. மீதமுள்ள நிதி, ஈரோடு மாவட்ட மதிமுகவுக்குச் சொந்தக்கட்டடம் வாங்க தலைமைக் கழக நிதியாக வழங்கப்படுகிறது என்றார் கண்ணப்பன்.
Comments
Story first published: Monday, July 3, 2000, 5:30 [IST]