For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

8 கி.மீ. தொலைவிலிருந்து அத்வானிக்கு கருப்புக் கொடி

ஈரோடு:

ஈரோட்டில் மதிமுக நடத்திய தமிழக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத்திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கருப்புக் கொடி காட்டிய தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாநாடு நடந்த மேடைக்கு எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு காங்கிரஸ்தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டினர். ஈரோடு மாநாட்டில் அத்வானி கலந்துகொண்டால் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று ஏற்கனவே காங்கிரஸ்கட்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது நாள்மாநாட்டில் அத்வானிபேசினார். பேசி முடித்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார். அத்வானி வந்தவிபரம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் பன்னர் செல்வம் பூங்கா அருகே கருப்புக் கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியினரின் கருப்புக் கொடி போராட்டம் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்குத் தெரியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X