For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜெர்மனியில் விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி
இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு

டெல்லி:

ஜெர்மனியில் உள்ள மியூனிச் நகரில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஃபேஷன் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்கஉள்ளன.

இது குறித்து இந்திய-ஜெர்மனி ஏற்றுமதி வளர்ச்சித் திட்ட இயக்குநர் டி. கேப்ஸ்குல்கூறியதாவது:

மியூனிச்சில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கும் இக் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறும்.இதில் ஜலந்தர், மீரட், டெல்லி பகுதிகளில் உள்ள விளையாட்டுப் பொருட்களைத்தயாரிக்கும் சுமார் 30 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், கிரிக்கெட் விளையாட்டுக்கான பிற பொருட்கள்,ஹாக்கி மட்டைகள், குத்துச்சண்டைக்குத் தேவையான பொருட்கள், உள் அரங்கவிளையாட்டுப் பொருட்கள், அதலெடிக்ஸ் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவைஇக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும்.

ஜெர்மனி கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைவிளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய-ஜெர்மனிஏற்றுமதி வளர்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

சமீபகாலமாக விளையாட்டுத் துறைக்கு ஜெர்மனி அரசு அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகிறது. அதிக அளவில் வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டில்ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜெர்மனியில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது.மேற்கண்ட காரணங்களால் மியூனிச் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் அதிகம்கலந்து கொள்கின்றன என்றார் கேப்ஸ்குல்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X