தமிழகத்தில் இன்று
காங்கிரஸுக்கு மீண்டும் வாருங்கள் ... சிவாஜிக்கு அழைப்பு
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனை மீண்டும் காங்கிரசில் சேர்க்கும் முயற்சியில் தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார்.
சிவாஜி மீண்டும் காங்கிரசுக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.புதிய தலைவராக பொறுப்பேற்றதும் அவர் சிவாஜியை சந்தித்தார். உடல் நலப்பிரச்னை காரணமாக அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்றுஒதுங்கியிருக்கும் சிவாஜியிடம், மீண்டும் காங்கிரசில் சேருங்கள் என்று அழைப்புவிடுத்தார்.
இதுபற்றி இளங்கோவன் கூறுகையில், சிறந்த தேசியவாதியான சிவாஜி காங்கிரசில்மீண்டும் சேர வேண்டும். காங்கிரஸ் பலமடைய சிவாஜியின் ஆதரவு மிகவும்அவசியம்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்படம் மற்றும் பேட்ஜ் அணிந்து வந்த மதிமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதிமுக மாநாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லைஎன்றாலும், அதில் பேசிய தலைவர்கள் பலர் புலிகளை ஆதரித்தே பேசியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி பேசி சென்ற பிறகு ராமதாஸ் புலிகளைஆதரித்து பேசியுள்ளார் என்றார் இளங்கோவன்.