தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கொழும்பு அருகே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு

கொழும்பு:

இலங்கைத் தலைநகர் கொழும்பு புறநகரில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

கங்கோடிவிலா என்ற சிறிய நகரில் இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது. கொழும்பு புறநகரான நுகேகோடா என்ற பகுதிக்கு அருகே கங்கோடிவிலாஉள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு இந்த குண்டு வெடித்தது.

வெடிகுண்டு சம்பவம் குறித்த முழுத் தகவல்களும் கிடைக்கவில்லை. விபத்தில் மாஜிஸ்திரேட்டுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. கோஷ்டிப் பூசல் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாகபோலீஸார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு வெடித்ததும் ஏற்பட்டகுழப்பத்தைப் பயன்படுத்தி பல கைதிகள் நீதிமன்றத்திலிருந்து தப்பி விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் இப்போதுபோலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாடு முழுவதிலும் விடுதலைப் புலிகள் புதன்கிழமை மனித வெடிகுண்டு நினைவு நாள் அனுசரிப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+