பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
தி.மு.க.வினரால் படுகொலை செய்யப்பட்ட கரூர் அதிமுக கவுன்சிலர் குடும்பத்திற்குரூ.50 ஆயிரம் குடும்ப நல நதியாக வழங்கப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம் தாந்தோணி பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளரும், 15வதுவார்டு கவுன்சிலருமான எம்.பி.ஆறுமுகம், திமுக ரவுடிகளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சமீப காலமாக தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் சமூக விரோதிகளாலும்,திமுகவினராலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இதை நான் பலறை கண்டித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைஎடுக்காத காரணத்தால் மேலும் ஒரு தொண்டரை இழந்திருக்கிறோம்.
படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஎன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு அதிமுகசார்பில் 50 ஆயிரம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.