For Daily Alerts
Just In
யோகம் பயிலுவோம்
பசியால் அழத குழந்தையை தரையில் வீசிக் கொன்ற தந்தை
கோவை:
கோவையில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன்(22). இவர் பாத்திமா (20) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குபெண் குழந்தை உண்டு. திங்கள்கிழமை இரவு குழந்தை பசியால் அழுதது. அப்போதுபாத்திமா குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்.
குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த முருகேசன், பாத்திமாவிடமிருந்து குழந்தையைவாங்கி தரையில் வீசினார். தரையில் அடிபட்ட குழந்தை இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானமுருகேசனைத் தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 5, 2000, 5:30 [IST]