தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி,மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என கோவையில் பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
கயத்தாறில் காற்றாலையைத் துவக்கி வைத்து விட்டு, பிரதமர் வாஜ்பாய், கோவைவழியாக டில்லி திரும்பினார். கோவையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த வாஜ்பாய்நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு கூடுதல்அதிகாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி கூடுதல் அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சுயாட்சி கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, மற்றமாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றாமல் தடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இந்ததீர்மானத்தை நிறைவேற்றியதற்காக அந்த மாநில சட்டசபை கலைக்கப்பட மாட்டாது.
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் கொள்கையில் மாற்றமில்லை.இருதரப்பினரும் கேட்டுக் கொண்டால் ஒழிய, அவர்களது பிரச்னையில் இந்தியாதலையிடாது. அமைச்சரவையில் இப்போதைக்கு மாற்றம் எதுமில்லை என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்தார்.
பிரதமருடன் மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், வைகோ ஆகியோர்உடன் வந்திருந்தனர். கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் மற்றும் அதிகாரிகள்,பா.ஜ. மாநில வர்த்தக அணித் தலைவர் சேகர் ஆகியோர் வாஜ்பாயை வரவேற்றுவழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications