பிரதமர் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி. மாரடைப்பில் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்தபோது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில்ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.பி. மாரடைப்பால் இறந்தார்.
சென்னை அடையார், மருதம் மாளிகையில் போலீஸ் கமாண்டோ பிரிவு எஸ்.பியாகஇருந்தவர் ஜெயக்குமார். 58 வயதாகும் இவர் இன்னும் 20 நாட்களில் ஓய்வு பெறஇருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்திருந்ததால், அவருக்குப் பாதுகாப்புஅளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப்பணிகளை மேற்பார்வையிட்டு விட்டு வீடு திரும்பினார்.
நள்ளிரவுக்கு மேல் 2.45 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம் ராசிபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications