யோகம் பயிலுவோம்
ஒரிசா விலங்கியல் பூங்காவில் 4 புலிகள் மர்ம சாவு
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் நகரிலுள்ள விலங்கியல் பூங்காவில், விநோத நோய்க்குநான்கு புலிகள் பலியாகியுள்ளன. ஆனால் இது 10 ஆக இருக்கும் என்றுஅதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்தகனன் விலங்கியல் பூங்காவில்தான் இந்த மர்ம நோய் புலிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது.
முதல் புலி ஜூன் 23-ம் தேதி இறந்தது. மற்ற மூன்று புலிகளும் செவ்வாய்க்கிழமைஇறந்தன. பிற புலிகள் அனைத்தும் நலமுடன் இருப்பதாக விலங்கியல் பூங்காஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நந்தகனான் பூங்காவில்தான் ஆசியாவிலேயே அதிக புலிகள் உள்ளன. மொத்தம் 50புலிகள் இங்கு உள்ளன.
தற்போது புலிகளைத் தாக்கும் நோய் என்ன என்பது குறித்து அதிகாரிகளுக்குக்குழப்பமாக உள்ளது. வைரஸ் அல்லது பாக்டீரியா காரணமாக இந்த நோய் வருகிறதாஎன்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications