தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற 7 பேர் விபத்தில் சாவு

நெல்லை:

குற்றாலத்துக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் மீது லாரி மோதியதில் டாடாசுமோவில் சென்ற 7 பேர் இறந்தனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியிருப்பதால் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த ஊருடையப்பன்குடியிருப்பில் வசித்து வருபவர் மாதனூர் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி. இவரது மகன்ஜெயக்கண்ணன் (25) தனது டாடா சுமோ காரில் நண்பர்களுடன் குற்றாலம்சென்றார்.மொத்தம் ஏழு பேர் காரில் இருந்தனர்.

குற்றாலத்திலுள்ள அருவிகளில் குளித்துவிட்டு புதன் கிழமை அதிகாலை நெல்லைக்குதிரும்பிக் கொண்டிருந்தனர். கார் ஆலங்குளம் அருகே உள்ள வெள்ளாளன் குளம்என்ற இடத்தில் வரும் போது எதிரே சரக்குகளை ஏற்றி வந்து கொண்டிருந்த லாரிநேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த ஜெயக்கண்ணன், வள்ளிநாயகம் (வயது 25),கண்ணன் (வயது 25), நாகராஜன் (வயது(38) உட்பட ஏழு பேரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+