தெருவோரச் சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் ஹிங்கிஸ்
பொகோடா:
கொலம்பியாவில் உள்ள தெருவோரச் சிறுவர்களின் நல்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந் நாட்டுக்கு உலக மகளிர் டென்னிஸின் முதல் நிலைவீராங்கனை மார்ர்டினா ஹிங்கிஸ் செல்கிறார்.
உலகிலேயே மிகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகமுள்ள நாடாக கொலம்பியா கருதப்படுகிறது. ஏழைநாடான அங்கு ஏராளமான தெருவோரச்சிறுவர்கள் வசிக்கின்றனர். அச் சிறுவர்கள் தங்களது தினசரி வாழ்க்கைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
உள்நாட்டுக் கலவரத்தால் பல சிறுவர்கள் அனாதையாக விடப்படுகின்றனர். அவர்கள் தினந்தோறும் பிச்சை எடுத்துச் சாப்பிடும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டனர். சில சிறுவர்கள் கலவரக் கும்பலில் சேருகின்றனர்.
இதனால், அவர்கள் எதிர்காலத்தில் பெரிய குற்றவாளிகளாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தெருவோரச் சிறுவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ளது.
இத் திட்டங்கள் தொடர்பாக தெருவோரச் சிறுவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக ஜூலை 12-ம் தேதி முதல் கொலம்பியாவில்சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் மார்ட்டினா ஹிங்கிஸ்.
ஐக்கிய நாடுகளின் நல்லெண்ணத் தூதராக கொலம்பியா செல்லும் மார்ட்டினா ஹிங்கிஸ், அந் நாட்டின் தெருவோரச் சிறுவர்களைச் சந்திக்கிறார். அவர்களுடன்பேசி அவர்களது நல்வாழ்வுக்காகமேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை விளக்கிக் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஹிங்கிஸ் மேற்கொள்ள உள்ள இப் பயணத்துக்கு கொலம்பியாவின் முதல் பெண்மணி நோஹ்ரா புயானா டி பாஸ்ட்ரானஏற்பாடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications