யோகம் பயிலுவோம்
சியர்ரா லியோனிலிருந்து வைர ஏற்றுமதிக்கு ஐ.நா. தடை
ஐ.நா. சபை (நியூயார்க்):
சியர்ரா லியோனிலிருந்து வைரம் ஏற்றுமதி செய்வதற்கு 18 மாதங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது.
சியர்ரா லியோனில் ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் இது முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது உள்நாட்டுப்போர் நடப்பதாலும், நாட்டில் அபரிமிதமாக இருக்கும் வைரத்தை விற்று ஆயுதங்கள் வாங்கப்படுவதாலும், இந்த ஏற்றுமதித் தடையை ஐ.நா. சபைகொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடந்தது. தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 14 பேர்வாக்களித்தனர். மாலி நடுநிலை வகித்தது. சியர்ரா லியோனிலிருந்து வைரங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு லைபீரியா வழி வகுப்பதாகதெரிவிக்கப்பட்டதால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாலி புறக்கணித்தது.
தீவிரவாதிகள் அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியினரின் கட்டுப்பாட்டில் உள்ளவைரச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் வைரங்களைஏற்றுமதி செய்ய வேண்டுமானால், சியர்ரா லியோன் அரசு அமைக்கும் குழுவின் பரிசீலனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையே, வைரங்களை மனதில் கொண்டே தீவிரவாதிகள் சண்டையிட்டு வருவதாக ஐ.நா. சபைக்கான சியர்ரா லியோன் தூதர் இப்ராகிம் கமாராகூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு வேறு எதுவும் காரணம் அல்ல. வைரங்கள், வைரங்கள் மற்றும் வைரங்கள்தான் பிரச்சினை என்றார்.
இப்போது விதிக்கப்பட்டுள்ள தடை 18 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகி விடும்.