தமிழகத்தில் இன்று
ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கம் அமைக்க தேசிய கனிம நிறுவனம் விருப்பம்
டெல்லி:
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள வைரம் மற்றும் தங்கம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க இந்தியாவின் தேசிய கனிம வளர்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது.
மத்திய எஃக்குத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறு தேசிய கனிம வளர்ச்சிக் கழகம். இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் நமீபியா, அங்கோலா,போட்ஸ்வானா, தான்சானியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் தங்கம் மற்றும் வைரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக அந்தந்த நாட்டு அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டிலும், குறிப்பாக ஆந்திராவில் தங்கம் மற்றும் வைரம்அதிகம் கிடைக்கும் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்க அக் கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் அக் கழகத்துக்கு ரூ.20,664 கோடி வருமானம் கிடைத்தது. தனது அரசு மற்றும் பிற பங்குதாரர்களுக்கு 25 சதவீதம் டிவிடென்ட்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அக் கழகத்தின் ஆண்டு வைர உற்பத்தி 40,075 காரட்டாக உயர்ந்துள்ளது என்று அக் கழகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.