தமிழகத்தில் இன்று
கருக்கலைப்பு செய்யாதீர்கள்... டாக்டர்களுக்கு போப் அறிவுரை
வாட்டிகன்சிட்டி:
கருக்கலைப்பும், கருணைக்கொலையும் மன்னிக்க முடியாத குற்றங்கள். எனவே,ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த இரு தவறுகளும்இனிமேல் செய்யக் கூடாது என்று போப்பாண்டவர் இரண்டாவது
ஜான் பால் கூறியுள்ளார்.
ரோம் நகரிலிருந்து வந்திருந்த டாக்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இயற்கையாகவந்த உயிர், இயற்கையாகவே பிரிய வேண்டும். மரணத்தை நாம் நிர்ணயிக்கக் கூடாது.
கருக்கலைப்புக் கலாச்சாரம் இன்றைய சமூகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.பிறப்பதற்கு முன்பே ஒரு உயிரை அழிப்பது பெரும் குற்றம். இதேபோல, கருணைக்கொலையும் மன்னிக்க குடியாத குற்றம்.
நோய்கள், வலிகளால் அவதிப்படும் மக்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமைஇல்லை. இந்த இரு குற்றங்களையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இந்த இரு விஷயங்களும் சட்டவிரோதமானவை. எந்தச் சட்டத்திலும் இவற்றிற்குமன்னிப்பு கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications