தமிழகத்தில் இன்று
வெற்றி பெறாமல் விட மாட்டோம் என்கிறது மதச்சார்பற்ற ஜனதாதளம்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறாமல் விட மாட்டோம் என்று தமிழக ஜனதா தளம் (எஸ்) கூறியுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகள்அவசரக் கூட்டம் அதன் தலைவர் ஜி.ஏ.வடிவேலு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது த.மா.கா அணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி இனிமேலும்அதே கூட்டணியை தொடர முடிவு செய்துள்ளது.
இதுபற்றி இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் வடிவேலு, தமிழகத்தில் எங்கள் கட்சி த.மா.கா கூட்டணியில் தொடர்கிறது.
கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், இந்த தேர்தலில் விடமாட்டோம்.மதவாதக் கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை ஏற்படுத்தி போட்டியிட்டுவெற்றிகளை குவிப்போம் என்றார்.