தமிழகத்தில் இன்று
சீனாவிடம் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கோருகிறது பா.ஜ.க.
குவஹாத்தி:
சீனாவில் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரும்படி சீனாவை பாரதீய ஜனதா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜகவின் செயலாளர் பி.பி. ஆச்சார்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சீனாவின் தென் பகுதியில் கடந்த மாதம் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்புஏற்பட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தால் அருணாசலப் பிரதே மாநிலத்தில் உள்ள பாலங்களும், சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுமார் 100 கோடிரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சட்ட திட்டத்தின்படி இந்த இழப்புக்கு சீன அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றார்ஆச்சார்யா.
யு.என்.ஐ.