For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
டெல்லி - உ.பி. அரசு பஸ் போக்குவரத்து துவங்கியது
டெல்லி:
டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கிடையே கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் போக்குவரத்து சனிக்கிழமைஇரவு முதல் மீண்டும் துவங்கியது.
டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கிடையே, பஸ் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் தொடர்பாக ஈகோ பிரச்சினை எழுந்தது.இதையடுத்து இரு மாநிலங்களுக்கிடையேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் பர்வேஸ் ஹஸ்மி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இரு மாநில போக்குவரத்து ஆணையர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இரு மாநில அரசு பஸ்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி இயக்கஇப்பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, July 9, 2000, 5:30 [IST]