தமிழகத்தில் இன்று
ஜப்பானில் எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், நிலச்சரிவு
டோக்கியோ:
ஜப்பானில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலநடுக்கமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தலைநகர் டோக்கியோவுக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் மியாகேஜிமா தீவில் உள்ள எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென்றுவெடித்தது. கரும்சாம்பல் நிறப் புகையை எரிமலை கக்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் எரிமலைச் சாம்பலாலும், புகையாலும் மூடப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்த சில மணி நேரத்தில் மியாகேஜிமா தீவுக்கு அருகில் உள்ள கோஸுஷிமா மற்றும் நீஜிமா தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிச்டெர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் பாதிப்பு 6 என்று பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்ட கோஸுஷிமா தீவில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், நிலச்சரிவுஆகியவற்றால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய உடனடி தகவல் ஏதும் இல்லை.
இருப்பினும் சம்பவ இடங்களுக்கு மீட்புப் படையினர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
ராய்டர்ஸ்.