தமிழகத்தில் இன்று
பெண் ஊழியர்களை நீக்க ஐ.நாவுக்கு தலிபான் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வுக்கு சொந்தமான அலுவலகங்கள், நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளஅமைப்புகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்களை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற்று கொள்ளவேண்டும் என்று ஆப்கானிஸ்தான் நாட்டைக் கையில் வைத்திருக்கும் தலிபான் மத அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று நிவாரண பணிகளை மேற்கொள்ளும்அமைப்புகளின் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் மால்வி அப்துல், பி.பி.சி. டிவிக்கு அளித்த பேட்டியில்ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவலோ,நடமாட்டமோ சாத்தியமில்லை.
செவ்வாய்க்கிழமை காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் குண்டுவெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பினால்உயிர்ச்சேதமோ, அதிக அளவு பொருட்சேதமோ ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் சட்டம்-ஒழுங்கு நிலைசீர்கெடாமல் இருப்பதையே இது காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் இங்குள்ள தூதரகத்தில் குண்டுவெடிக்கச்செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் முயற்சி எப்போதுமே பலிக்காது என்றார்.
யு.என்.ஐ.