For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பா.ம.க. ஆட்சியையே மக்கள் விரும்புவதாக கூறுகிறார் ராமதாஸ்

சென்னை:

தி.மு.க, அ.தி.மு.கவை மக்கள் விரும்பவில்லை. பா.ம.க ஆட்சிக்கு வருவதையேஅவர்கள் விரும்புகின்றனர் என்று பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

கட்சி வளர்ச்சிக்காக சட்டமன்றத் தொகுதி வாரியாக மாநாடு நடத்தி வருகிறார்ராமதாஸ். இதுவரை 95 தொகுதிகளில் மாநாடு நடத்தி முடித்துள்ளார். 96வது மாநாடுதேனியில் புதன் கிழமை நடைபெற்றது.

100-வது மாநாடு வருகிற 16ம் தேதி சென்னையிலும், 234-வது மாநாடு மதுரையிலும்நடைபெறுகிறது.

தேனி மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது:

பா.ம.க சற்று வித்தியாசமான கட்சி. இன்று பா.ம.க இந்தியாவில் 100 கோடி மக்களைஆளும் கட்சிகளில் ஒன்று என்ற உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் 67 முதல் காங்கிரஸ் ஆட்சி செய்தது. பின்பு 33 ஆண்டுகள் தி.மு.க,அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிகள் வந்தன. ஆனால், மக்கள் இப்போது இந்தகட்சிகளை தவிர வேறு ஒரு மாற்றுக் கட்சி தேவை என்று கருதுகின்றனர். அந்த மாற்றுக்கட்சி பா.ம.க தான் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக பா.ம.கவால் மட்டுமே மாற்று ஆட்சியை தரமுடியும். அதற்கு காரணம் எந்த பிரச்னையானாலும் பா.ம.க தான் அச்சப்படாமல் பேசிவருகிறது. சமூக நீதியை பற்றி பேச இந்திய அளவில் எந்த தலைவரும் இல்லை.ஆனால், நான் பேசி வருகிறேன்.

நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு அதிகாரிகளிடம் வரவேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும். வெளிநாடுகள் எல்லாம் வேகமாகமுன்னேறியதற்கு இது தான் காரணம்.

சிறு சிறு பிரச்னைகளை அரசு நினைத்தால், அதிகாரிகள் நினைத்தால் ஒரு மாதத்தில்முடித்து விடலாம் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X