For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தெ.ஆப்பிரிக்கா

கொழும்பு:

கொழும்பில் நடந்து வரும் மூன்று நாடுகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

புதன்கிழமை நடந்த கடைசி சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் தென் ஆப்பிரிக்கா நுழைந்தது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேவிட் டெர்பஜ், அபாரமாக பந்துவீசி, 20 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெர்பஜ்ஜுக்கு, இது இரண்டாவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் துவக்க வரிசை ஆட்டக்காரர்களை டெர்ஜப் தினறடித்துவிட்டார். முதலில் ஆடிய பாகிஸ்தான் 44.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 37.3 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கை எட்டியது. இதற்காக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

கிர்ஸ்டன் எட்டு பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். கல்லினன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். ஜான்டி ரோட்ஸ் 12 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். முன்பு ஆடிய ஆன்ட்ரூ ஹால் 15 ரன்களும், கல்லிஸ் 27 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்குள் தென் ஆப்பிரிக்கா நுழைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இலங்கையைசந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X