Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் குண்டுவெடிப்பின் பின்னணியில் பெரும் சதி

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சர்ச்களில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பெரும் சதிச் செயல்கள்மறைந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்களிடையே கலவரத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் கர்நாடகத்தில்தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்றும், அவர்கள் தான் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என்றும் கர்நாடக போலீசார் கூறுகின்றனர்.

ஹூப்ளி, குல்பர்கா, பெங்களூரில் சமீபத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப்பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளையும், மதவாதத்தைத் தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளையும்கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இதற்காக 3 தனிப்போலீஸ் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்கர்நாடகத்தில் வாழும் பல்வேறு மதத்தினரிடையே அமைதியைக் குலைக்கும் வகையிலும், பீதியை ஏற்படுத்தும்வகையிலும், தீவிரவாதிகள்தான் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன்படி அவர்கள் முதலில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடிக்கச் செய்தார்கள். இதனால் இதற்குஇந்துக்கள்தான் காரணம் என்று சந்தேகம் வரும். இதன் மூலம் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மோதல்வரும். பிறகு அம்பேத்கர் சிலைகளுக்குக் குண்டுகள் வைத்துத் தகர்ப்பது. இதன் மூலம் இந்துக்களிடையே சாதிமோதல்களை உருவாக்குவது. இறுதியாக கோவில்கள், மசூதிகள் ஆகிய இடங்களில் குண்டு வைப்பது என்றுஅந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகப் போலீசாருக்குத் ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும்உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இதுகுறித்துக் கூறுகையில், குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப்பின்னணியில் உள்ளவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருக்கும் என்றும்தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இன்னும் இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள்உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

இதற்கிடையே, பெங்களூர் மாகடி சாலை, மினர்வா மில் அருகே, வேன் ஒன்றில் வெடித்த குண்டுவெடிப்பில்காயமடைந்த இப்ராமிமை போலீஸார் கைது செய்துள்ளனர். குண்டுவெடித்த வேனில் இருந்து சிறுபான்மைக்கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களைப் போலீசார் கைப்பற்றினர்.

ஜெகஜீவன் ராம் நகர் செயின்ட்பால் சர்ச்சில் குண்டு வைத்து விட்டு, மீதமிருந்த குண்டுகளுடன் வந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து வேன் எரிந்தது. இதில் வேனிலிருந்த 2 பேர் இறந்தனர். வேனை ஓட்டி வந்தஇப்ராகிம் காயமடைந்தார்.

இச்சம்பவம் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகை அளிப்பதாகவும் போலீசார்அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+