தமிழகத்தில் இன்று
மீண்டும் வந்த மெர்லின் ஓட்டே
நுவோரா (ஜமைக்கா):
ஜமைக்காவின் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மெரிலின் ஓட்டே, சாண்ட்ரினாவில் நடந்த100 மீட்டர் போட்டியில் 11.42 விநாடிகளில் தூரத்தைக் கடந்தார்.
போதைப் பொருள் உபயோகித்ததற்காக சில காலம் தடை செய்யப்பட்டிருந்தமெரிலின், தற்போது மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். முதல்போட்டியாக சான்ட்ரினாவின் நுவோரோ நகரில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.
மீண்டும் வந்துள்ள மெரிலினின் ஓட்டத்தில் பழைய வேகம் இல்லை. இதுவரைஇல்லாத அளவுக்கு 11.42 விநாடிகளில் தூரத்தைக் கடந்தார் மெரிலின்.இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட இது அவருக்குப் பொருத்தமான நேரம்இல்லை. மெரிலினின் தனிப்பட்ட சாதனை நேரம் 10.47 விநாடிகள் ஆகும். சிட்னிஒலிம்பிக் போட்டியில் இதை மெர்லினின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 வயதாகும் மெர்லின் ஓட்டே, ஒரு வருடத்திற்கு முன்பு போதைப் பொருள்உபயோகப்படுத்தியதற்காக பந்தயங்களில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.